Showing posts with label சதாவின் நாட்குறிப்பு. Show all posts
Showing posts with label சதாவின் நாட்குறிப்பு. Show all posts

Monday, March 31, 2025

நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்

கப்டன் மொறிஸ் (M. O) பரதராஜன் தியாகராஜா (பரதன் )
லெப். ரம்போ (தணிகாசலம் ஜெகநேசன்)
வீரவேங்கை சிறீ (வடிவேலு சிறீதரன்)

ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள் காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும் பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள் தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள் பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.

ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும் திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு (பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர் பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம் வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள் மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார்.

அந்த மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர போராளிகள் அழைத்து வருவார்கள்.

அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில் ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.

அவனது தலையைத் தடவி “எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க?” என்று கேட்டேன். “ஒன்பதாவது” என்றான்.  “பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்” என்றான் .

காவியங்கள் மனதில் வந்தன. அவன் பரதன் தான்… “தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும்.  நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்” என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .

அப்பொழுது மீண்டும் அவன் வந்தான். “சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள் செய்யுங்கள்” என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில் லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின் தம்பி, அவரின் நிர்வாகத்தில்  வைத்து இருந்தோம். “அந்தக் கடையில் பகுதி நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ” என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்) சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான். தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும், தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும் உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும் குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின் செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ் ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து “அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு கடையை சிறப்பாகச் செய்யலாம்” என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.

சவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது. தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும். பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் “காவலுக்கு தானும் செல்லவேண்டும்”(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம் கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.

கடையில் அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் “இனி உனக்கு கடை சரிவராது” என்று. “எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ போனால் இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.  “வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது” என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன்.  “சதா அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ” என்று கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .

“இது ஒரு பயிற்சி உனக்கு. இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை சொன்னார். அதைச் செய்” என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம் ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம் இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. “நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை” என்று கடையின் பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும் அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச் சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். “சரி கடையை நடத்து” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

பின் அண்ணனின் நேரடிப் பார்வையில் ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில் மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின் பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.

மொரிஸ் சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின் அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.

இந்தத் தருணத்தில்
கப்டன் மொரிஸ்
மேஜர் கேசரி
லேப்டிநெட் சங்கர்
மேஜர் மலரவன் வேலன்
லேப்டிநெட் சிறி
கப்டன் நாதன்
லேப்டிநெட் இன்பன்
லெப்டினென்ட் காந்தன்
லேப்டிநெட் ரமணன்
லேப்டிநெட் முரளி
லேபதினெட் வெள்ளை
கப்டன் ரஞ்சன் சித்தப்பா

என்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.

ஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை!

– சதாவின் நாட்குறிப்பு

அண்ணியார் மதிவதனியின் முதல் களம் !

1983 இல் இலங்கை தீவின் சிங்களப் பகுதிகளில் நடந்த இனக்கலவரத்தில் உயிர் உடமை இழப்புடன் எல்லா வகையான பாதிப்புபாதிப்புகளாலும் தமிழர்கள் பாதிக்கப் பட்டு ஈழத்தின் பகுதிகளுக்குத்  திரும்பி இருந்தார்கள். இவர்களில் சிங்கள பகுதிகளில் தொழில் புரியும் தமிழர்களும், தெற்கில் உள்ள பல்கலை கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்களும் மீண்டும் சிங்கள பகுதிகளுக்கே செல்லும் இக்கட்டான நெருக்கடிக்குள் சிக்கி கொண்டார்கள் .

தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை , ஆகவே வடக்கில் யாழ் பல்கலைகழகத்திலேயே கல்வியை தொடரும் வசதிகளை செய்து தரவேண்டும் என்று தெற்கு பல்கலைகழக மாணவர்கள் சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். அதற்கு சிங்கள அரசு செவி சாய்க்கவில்லை , மாணவர்கள் தொடர் போராட்டங்களில் இறங்கினார்கள்.

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றவர்கள் என்று எல்லோரும் களத்தில் இறங்கி போராடினார்கள். யாழ்பாண நகரம் போராட்டக் களமாக மாறியது .சிறப்பாக யாழ் பல்கலைகழகம் போராட்டத்தின் மத்திய களமாக மாறியிருந்தது . இராணுவ கெடுபிடிக்குள் சிக்கி இருந்த யாழ் குடாநாடு அன்று பெரும்பதட்டமாகவே காட்சி தரும் .

தெற்கில் இருந்து உயிர் பிளைத்து வந்த நாங்கள் மீண்டும் அங்கு செல்வது சாவைதேடி மீண்டும் செல்வதற்கு நிகரானது என்று தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்கள் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் இறங்குவதாக தீர்மானித்தர்கள். அன்று சாகும் வரை போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுள் மதிவதனி அண்ணியும் இருந்தார்கள். அன்று அவர்கள் அண்ணனை சந்தித்து இருக்கவே இல்லை . ஒரு பல்கலை கழக மாணவியாக அவரும் அந்த போராட்டததில் கலந்துகொண்டார் ,நானும் அங்கு அவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துகொண்டேன் . முதல் மூன்று நாட்கள் மட்டுமே நான் அந்த போராட்ட அமைவிடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து தொடர்ந்து போராடும் ஒன்பது மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தேன் . பேராதனை கட்டுபத்து பல்கலைகழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களே சாகும் வரை போராடுவது என்று முடிவெடுத்து போராடினார்கள் . அதில் மதிவதனி அண்ணியாரும் ஒருவர் .

நாங்கள் யாழ்பல்கலை கழக மாணவர்கள், தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு ஆதரவுக்காக மூன்று நாட்கள் முறை சுழற்சியாக அமர்ந்து இருந்தோம். முதல் மூன்று நாள் போராட்டத்தின் முதல் நாள் மாலை ஆரம்பம் ஆகியது . இரவு ஓய்வுக்காக போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்ளுக்கு ஒரு விரிப்புடன் ஒரு தலையணையும் வழங்கபட்டது , என்னிடம் ஒருவிரிப்பை புன்முகத்துடன் ஒருமாணவி நீட்டினார் . அவர்தான் அண்ணியார் . அன்று எங்கள் அறிமுகம் சாதரமான ஒரு பல்கலைகழக மாணவனாக சக மாணவியாக அவரை சந்தித்த பொழுது, இவர்தான் தமிழர் வரலாற்றில், இன்னும் சில ஆண்டுகளில் பெரும் நாயகியாக வரபோகின்றார் என்று நான் மட்டுமன்றி அங்கு இருந்த எவருக்கும் அதை அறிந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை. அந்த மூன்று நாட்கள் அந்தமண்டபத்துள் இருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு பலவிடையங்களை பேசினோம் . 

நாங்கள் யாழ் பல்கலை கழகத்தின் மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பில் அங்கத்துவராக இருந்து விடுதலை போராட்ட கருத்துக்களை அது தொடர்பான நூல்களை சேகரித்து மாணவர்களுக்கு கொடுப்பதுடன் ஒரு சஞ்சிகை வெளியிட்டு மக்களுக்கும் சரியான வழிகாட்டலை செய்துகொண்டு இருந்தோம். அன்று போராட்டத்துள் மிகப்பெரிய சிக்கல்கள் இருந்தது. ஏறக்குறைய 40 இயக்கங்கள் இருந்தன .மக்களுக்குள் பெரும் குழப்பம். யார் எதில் உள்ளார்கள் என்று தெரியவில்லை . அனால் மக்கள் மனதில் பெரிசு என்று ஒரு பெயரில் பிரபாகரன் , தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெரும் நம்பிக்கை வளர்ந்துகொண்டு இருந்தது. அந்தபத்திரிகையில் நான் அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . எல்சல்வடோர் போராட்டத்தில் கியுப விடுதலையில் வியட்நாமிய விடுதலையில் செம்படையில், ரசியாவில் பெண்கெரில்லா போராளிகள் பங்களிப்பு பற்றி. அது பற்றிய ஒரு கருத்து பரிமாற்றத்தில் அண்ணியார் மதிவதனியுடன் சில உரையாடல்கள் செய்த பெரும்பாக்கியம் எனக்கு கிடைத்து .

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நிலையிலும் உண்ணாவிரதம் இருக்கும் சக மாணவர்களுக்கு வேண்டிய ஒழுங்குகளை முதல் ஆரம்பநாட்களில் மிகவும் உற்சாகமாக. செய்யும் எந்த பணியிலும் அண்ணியார் உற்சாகமாக பணியாற்றினார் . இன்னும் மனதில் உள்ள நினைவுகள் . அன்று வெப்பம் அதிகமாக இருந்தது, மின்விசிறிகளை மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்தார்கள் . அவற்றை சரியாக எல்லா இடத்திலும் வைக்கும் வேளைகளில் அண்ணியாரும் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தார் . ஏற்கனவே மூன்று வேளை உணவு உண்ணாமல் இருந்த நிலையில், அந்த களைப்பு தெரியாமல் எலோரிடமும் ஒரு தாயின் பரிவுடன் , அந்த அகண்ட விழிகள் பிரகாசமாக பேசிக்கொண்டு இருந்தது . ஒரு புன்முறுவல், வெடுக்கென்று திரும்பும் சுறுசுறுப்பு, மூன்று நாட்களில் உணவு அருந்த நிலையிலும் எவ்வளவுக்கு அதிகமாக சுருசுருபாக ஒருவரால் இயங்கி மற்றவர்களை சோர்வடையவிடாமல் அன்பு காட்ட முடியும் என்பதை அவர் காட்டிக்கொண்டு இருந்தார் .

ஒருபோராட்டத்தை மிகவும் கவனமாக கையாளும் ஒரு ஆளுமை மிக்க பெண்மணியாக அவர் இருந்தார் ,அந்த இயற்கையான சுபாபமே அவரை அங்கிருந்த எல்லோருக்குள்ளும் அவரை ஒரு மாணவ போராட்ட தலைவியாக ஏற்றுகொள்ள வழிசெய்தது . பிற்காலத்தில் அண்ணனும் அவரை தன துணைவியாராக தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக, அண்ணியாரின் இந்த சிறப்பு தன்மைகளே காரணமாக இருந்திருக்கும் என்று நான் ஊகித்துக்கொண்டேன் .

மூன்று நாட்களில் நான் அண்ணியாருடன் பெசிய பொழுதிலெல்லாம் அவரை மதி என்று பெயர்சொல்லியே அழைத்திருந்தேன் , அந்தமாபெரும் மனிசி இன்று எங்கள் வரலாற்றின் மிகப்பெரிய தலைவியாக இருக்கின்றார் என்னும் பொழுது . சிவனும் உமையும் எனக்கு அருள் தந்தார்கள் என்று முன்னவர்கள் கூறிய அதே ஆனந்தம் எனக்குள்ளும் உள்ளது . என்வாழ்வில் நான் அடைந்த மிகப்பெரிய கொடைகளில் , அண்ணனுனுடன் முதல் ஆரம்பகாலத்தில் செயலாற்றியது , அதனை தொடர்ந்து அண்ணியாரை அவரது முதல் களத்தில் சந்தித்து அவருடன் களத்தில் அவரது வழிநடத்தலில் நின்று அவருடன் அவரது முதல் களத்தில் போராடியது .இந்த கொடுப்பனவு உலகில் யார் யாருக்கெல்லாம் கிடைத்ததோ தெரியாது , நிற்சயம் என்க்கொருவனுக்கே உண்டு என்ற பெருமையும் எனக்குள் உண்டு.

இந்த வரலாறு எனக்குள் ஏன் இப்படி உள்வந்த்து என்று எனக்கு தெரியவில்லை . அதுவே என்னை இன்றுவரை தொடர்ச்சியாக இனத்தின் விடுதலைக்காக இலைமறை கனியாக இரு என்கின்றது . இராவணன் பிறந்த மண்ணில் பிறந்தேன்.  பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இணைந்தேன், அண்ணியாரின் முதல் போராட்டத்தில் அவருடன் துணை நின்றேன்.  தென்கையிலையில் பிறக்க முத்தி என்பார்கள் பிறந்தேன் . அதனிலும் பெரிய வரம் வாங்கியவன் நான் என்றே எனக்குள் என்னை நான் ஒழுங்குபடுத்துகின்றேன் . இது தற்புகழ்ச்சியாக இருக்கலாம் இருந்தாலும் என் வாழ்வின் பெரும் பயன் அது . என் வாழ்வை ஒழுங்குபடுத்தும் சக்தி அது .

போராட்டம் ஏழாவது நாளை நெருங்கியது மாணவர்கள் ஒன்பதுபேரும் சோர்வாக இருந்தார்கள் . சிங்கள அரசு பல்கலை கழகத்துள் புகுந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்தது . நிலை மிக சிக்கலாக மாறியது . மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு முக்கியமானதாக இருந்தது , போராடும் மாணவர்களை சிங்கள அரசு கைது செய்வதை தடுக்கவேண்டும். அற்கு ஒரே வழி தமிழீழ விடுதலைக்குள் மாணவர்கள் உள்வாங்க படவேண்டும் . அதற்கு அன்று பல்கலைகழக மாணவர்கள் தயாராக இருந்தார்கள் , அவர்கள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனையே தேர்ந்தெடுத்தமை தேசியத்தலைவரின் வழிகாட்டலில் விடுதலைப்புலிகள் மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் , மக்கள் விடுதலைப்புலிகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே.

எட்டாம் நாள் இராணுவம் யாழ் பல்கலை கழகத்துள் அத்துமீறி நுழையும் என்று இருந்தது . மாணவர்கள் பாதுகாப்பு அரணாக நின்று போராடுவததாக இருந்தது . இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்யும் , பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை தோன்றும் . எழாம் நாள் உடனடியாக முடிவுகள் எடுக்கபட்டன, அன்று இரவே மாணவர்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்து செல்வது என்று தீர்மானிக்கபட்டது . இராணுவ கெடுபிடிக்குள் விடுதலைபுலிகளின் படை பிரிவின் பாதுகாப்புடன் மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்லபட்டார்கள் ………

- சதாவின் நாட்குறிப்பு