ராஜேந்திரம் - முருங்கன்
1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர்.
இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டும் வந்தது. இக் காலப்பகுதியில்தான் இவன் எமது நாட்டில் நடக்கும் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்ற நோக்குடன் இவன் தனது நண்பர்களிடம் 'மச்சான் நாம் அடிமைகளாய் வாழ்கிறதை விட விடுதலைக்காய் போராடி சாவதுமேல், நான் ஒரு முடிவு எடுத்திட்டன் நான் இயக்கத்திலை இணையப் போறன்" என்று கூற அவனுடன் நண்பர்களான 2ம் லெப் நவாசும், லெப்ரினன் றொபேட்டும் 1988 இல் இணைந்து எமது அமைப்பில் பதிவாகினர். பதிவானதும் இவனுக்னு தங்கேஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டு மன்னாரில் 9 வது அணியில் பயிற்சி பெற்றான்.
இவன் பயிற்சி முகாமில் திறமையாக பயிற்சி பெற்று பொறுப்பாளர் மத்தியில் நற்பெயருடன் விளங்கியவன். பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைத்திட்டத்திற்காய் தனது சொந்த கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான். இவன் தனது கிராம மக்களுக்கு எங்கள் அமைப்பைப் பற்றியும், எமது போராட்டத்தையும் தெளிவு படுத்தியவன். அத்தோடு இவன் நின்று விடவில்லை. இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் அப்போது மன்னார்த்தீவுப் பொறுப்பாளராக இருந்த லட்சுமன் அண்ணனுடன் இவனை விட்டார். அங்கும் பொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்தான்.
அக்காலப் பகுதியில் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அந்நேரம் மன்னார் பழைய பாலம் என்னும் இடத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் மீது தாக்குதல் நடாத்த பொறுப்பாளர்களால் திட்டம் தீட்டப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இத்தாக்குதலில் தங்கேசும் பங்குபற்ற அனுமதி கிடைத்தது. இத்தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இம்முகாம் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இவன் திறமையாக செயல்பட்டு களமாடினான். அத்துடன் மன்னாரில் நடை பெற்ற பல தாக்குதல்களில் தனது திறமைகளை வெளிக் கொணர தவறவில்லை. இதற்காக தளபதியிடம் பாராட்டுக்கள் பல பெற்றான். இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் 1991ல் தன்னுடன் தங்கேசை எடுத்துக் கொள்கிறார். இந்நேரம் சிலாபத்துறைக்கு கொண்டச்சியிலிருந்து வரும் இராணுவத்திற்கு தாக்குதல் நடாத்த சுபன் அண்ணாவால் திட்டம் வகுக்கப் படுகின்றது. இக்தாக்குதலுக்கு தங்கேசின் திறமையான செயல்கனைக்கண்டு தங்கேசை ஒரு குழுவிற்கு அணித்தலைவனாக அனுப்புகின்றார். இத்காக்குதலிலும் தங்கேஸ் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. இத்தாக்குதலில் இவன் விழுப்புண் அடைகின்றான். பின் 1992 காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியால் இவன் வேறு துறைக்கு விடப்படுகின்றான். இங்கும் இவனது திறமைகள் வெளிபடுத்தப்பட்டு வளர்க்கப் படுகின்றது. அத்துறையிலும் இவனது திறமைகளைக்கண்டு பொறுப்பாளர்களின் பாலாட்டைப் பெற்று ஓர் படி வளர்கின்றான். அதன் பின்பு தங்கேல் தாக்குதல்களுக்கு செல்ல வேண்டும், எதிரியை எல்லையை விட்டு என்ற நோக்கத்துடன் கான் தாக்குதல்களுக்கு செல்வதற்கு பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கின்றான். இவனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அப்போது மன்னார் மாவட்ட சிறப்புதளபதியாக இருந்த யான் அண்ணன் அவனை தாக்குதல் குழுவில் குறிப்பிட்ட சில அணிகளுக்கு பொறுபாளனாக விடுகின்றார். இந்நேரம்தான் ப10நகரி தவளைத்தாக்குதல் திட்டமிடப்பட்டு தாக்குதலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் தங்கேஸ் மிகவும் திறம்பட தனது அணிகளை நகர்த்தி தாக்குதல்களை வேகப்படுத்திய வேளை எதிரியின் தாக்குதலால் காயமடைகின்றான்..
பின் 1994ல் மாவட்ட சிறப்பு தளபதியால் மாவட்ட வேவு அணிக்கு இரண்டாவது பொறுப்பாளனாக தங்கேஸ் விடப்படுகின்றான். தாக்குதல்களில் மட்டுமல்ல வேவு வேலைகளிலும் எதிரியின் காவலரன்களுக்கு அண்மையில் சென்று வேவு பார்த்து வந்தான். பின் மாவட்ட சிறப்புத் தளபதியின்; மெய்க்காப்பாளனாக இவன் தேர்ந்து எடுக்கப்படுகின்றான். இதன் பின்பு இவன் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி தாக்குதல்களை நடாத்துவதற்கு சிறப்புத்தளபதி அனுமதிக்கின்றார்.
அதன்படி இவனும் பல தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றான். இவ்வேளையில் தான் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இனஅழிப்பை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை. இத் தாக்குதலில் ஓர் அணியை வழிநாடாத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதை இவன் மிகுந்த சந்தோசத்துடன் ஏற்று தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தனது கட்டுபாட்டினுள் வைத்திருக்கின்றான். இதற்கு முன் நடாத்தப்பட்ட இடிமுழக்க நடவடிக்கையில் தலையில் விழுப்ப10ண் அடைந்தும் அவன் சளைக்கவில்லை. அக்காயத்துடன் தனது மக்கள் விடுதலை பெற வேண்டும், தனது மண் பறி போகக் கூடாது என்ற சிந்தனையுடன் மழை என்றும் பராது தனக்குரிய கடமைகளை செய்தவண்ணமே காணப்பட்டான்.
இந் நேரம்தான் எமக்கு தாங்கமுடியாத சோகம் ஒன்று காத்திருந்தது. 10.11.1995 அன்று தங்கேசின் வோக்கி அலறுகிறது. 'கலோ தங்கேஸ்" தங்கேஸ் தனது வோக்கியை எடுத்துக் கதைக்கிறான். அந்நேரம் எதிரியானவன் தனது தாக்குதலை அதிகரிக்கின்றான். தங்கேஸ் அவசரமாகவும் தனது உறுதி தளராத குரலிலும் கூறுகிறான். 'அண்ணை என்ர உயிர் இருக்குமட்டும் எதிரி ஒரு அங்குலம் தானும் அரக்க முடியாது. வேறை ஒன்றும் இல்லை. நன்றி அவுட்" என்ற பதிலே தங்கேசுவிடம் இருந்து கிடைத்தது. அதன் பிறகு தங்கேஸ் கட்டளைகளைப் பிறப்பித்தவாறு எதிரியின் தாக்குதல்களை முறையடித்தவாறு எதிரிமீது தாக்குதல் தொடுக்கின்றான். இந்நேரம் எங்கிருந்தோ வந்த எதிரியின் எறிகணை தங்கேசின் அருகில் விழ்;ந்து வெடிக்கின்றது. அவ் இடத்தே தங்கேஸ் சத்தமின்றி இப் புனித மண்ணை முத்தமிடுகின்றான். தான் நேசித்த காதலித்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் அம் மண்ணிலேயே மடிகின்றான்.
தங்கேஸ் சாகவில்லை. சரித்திரமாகிவிட்டான்.
எழுதியவர். போராளி சு.கீரன்.
Sunday, September 14, 2003
மேஜர் நேரியன்
ஓ அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்;தாலும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள். எனம் கரம் பிடிக்கும் எழுது கோலால் இவன் வாழ்வினை முழுமையாக வரைந்திட முடியாது. என்றாலும் எழுதத் துடித்தது எம் மனம். சிறு துளியென்றாலும் உன்னால் முடிந்ததை எழுது என்றது. இவன் வீர வரலாற்றில் சிதுளிகள் இங்கே.........
நேரியன்..... இவன் உள்ளத்தில் உற்றேடுக்கும் நேர்மை இவன் பெயரினுள்ளும் பொதிந்து இருந்தது, தருணை இவள் கண்களில் குடி கொண்டிருந்தது. தெளிவான பார்வை ஆழமான கருத்துமிக்க வார்த்தைகள், கண்டோரை எளிதில் கவரும் இவன் இதழ் சிந்தும் காந்தப் புன்னகை, பணிவைத் தன்னில் சுமந்திருக்கும் அழகிய வதனம் பெருமையில்லாத உள்ளம். ஆணுக்கு ஏற்ற அளவான உயரம். உயரத்திற்கேற்ற ஆரோக்கியமான உடல்வாகு. இவை எல்லாம் இணைந்து இவனை அலங்கரித்தன.
1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாத நடுப்பகுதியில் தன்னை முழுமையாகக் கரிகாலன் சேனையில் இணைத்துக் கொணடான். தனது ஆரம்பப் பயிற்சியினை வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமான சரத்பாபு 7 இல் பெற்றுக் கொண்டான். பயிற்சி முகாமில் தனது உடல் வலு, உள வலு என்பவற்றைப் பெருக்கிக் கொண்டான். பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சமர் எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் கல்விக்கும் உண்டு என்ற தலைவரின் கணிப்புக்கு இணங்க அரசியல் கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டான்.
அரசியல் கற்கை நெறி ஆரம்பிக்கையில் தலைவரின் கருத்துரையை உன்னிப்பாக அவதானித்த இவன் அக்கற்கை நெறியின் அவசியத்தையுணர்ந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினான். கற்கை நெறி ஆரம்பிக்கும் அன்றுதான் இவன் முதல் முதல் தலைவர் அவர்களை நேரே தன் விழிகளால் சந்தித்துக் கொண்டான். ஈதலால் அந்த நாளை தன் வாழ்வுக் காலத்தில் என்றும் கரைந்து போகாத நினைவாக தன் நெஞ்சமதில் பதித்து வைத்தான்.
போரளிகளின் வாழ்வு என்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் போல, கல்வியறிவும், களப் பயிறிசியறிவும் மாறி மாறி ஊட்டப்பட்டது. இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு கரைந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் பேய்கள் 'முன்னேறிப் பாய்தல்" என்ற நடவடிக்கை மூலம் வலிகாமப் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்தது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் ஏதிலிகளாக்கப்ட்டு இவன் இருந்த முகாம் வீதியேங்கும் வீசியெறியப்பட்டார்கள். இதனை அவதானித்த இவன் மனம் குமுறியது. களம் செல்லத் துடித்தான். இந்த வேளையில் தலைவரின் திட்டத்திற்கமைய முன்னேறிய பகைவன் மீது பாய புலிகள் தயாராகினார்கள். இவனும் அணியோன்றில் இணைக்கப்ட்டான். எனினும் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை எதிர்பார்த்ததை விட இலகுவில் வெற்றி கொள்ளப்ட்டதால் அவனது அணி சண்டைக்கு செல்லவில்லை.
இவ்வாறு இவனது கள வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த போது 60 எம்.எம் மோட்டார் பயிற்சி பெறுவதற்காக அனுப்பட்பட்டான். இவன் எதையும் கற்றுக் கொள்வதில் கற்ப10ரம் என்பதால் குறுகியகால பயிற்சியுடன் மோட்டாரை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவனாக வெளியேறினான். வெளியேறிய இவன் தனது மோட்டாருடன் முதலாவது களத்தில் எதிரியைச் சந்திக்கிறான். அந்தக் களம் திருவடி நிலைப் பக்கமாக இருந்து முன்னேறிய எதிரி மீதான தாக்குதல். அத்தான்குதலின் போது இவனது வோக்கி டோக்கி செயலிழந்து விட்டது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எறிகணை ஏவ வேண்டும். உடனே தனது அறிவு அனுபவத்தைப் பயன்படுத்தி டாங்கியில் சத்தம் வரும் நிலை நோக்கி மோட்டரை ஏவினான். ஏவிய எறிகணைகள் எதிரியின் டாங்கி மீதும் அதனைச் சூழ உள்ள பிரதேசத்துள் மீதும் வீழ்ந்து வெடித்தன. இக்களத்தில் இவனது மோட்டாரை இயக்கும் ஆற்றல் வெளிப்பட்டது.
மறுநாள் இவன் சூரியகதிர் இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள களம் விரைந்தான்;. அங்கு முன்னேறிய பகைவன் மீது நேர்த்தியான சூடுகளை வழங்கி எதிரியின் பக்கம் பலத்த இழப்பு ஏற்பட வழிவகுத்தான். 'சூரியக் கதிர்" இராணுவ நடவடிக்கை கோப்பாய் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்த போது இவன் அக்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டான். அங்கு தனது கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் ப10தம் ஆனையிறவில் இருந்து கிளிநோச்சி நோக்கி தனது ஆக்கிரமிப்பு கரத்தை நீட்டின. சத்ஜெய 1. 2 என ஆக்கிரமிப்பு முயற்சிகள் தோல்வியைத் தழுவ சத்ஜெய 3 எனத் தொடர்ந்தது. சத்ஜெய 3 இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள இவன் 120 எம். எம் மோட்டார் அணியில் ஒருவனாக நின்று செயற்பட்டான். பின்பு ஆனையிறவு பரந்தன் மீதான ஊடுருவல் தாக்குதலின் போது 1200 எம்.எம் மோடார் ஒன்றுக்கு தலைமை தாங்கி சென்று நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணிகளுக்கு பலம் சேர்த்தான்.
மே 13.. 2997 இல் மிகப்பெரும் பகைவெள்ளம் தாண்டிக்குளம் ஊடாகவும், நெடுங்கேணியுடாகவும் நகர்ந்தது. இதனை எதிர்கொள்;ள இவன் 120 எம் எம் பீரங்கியோன்றுக்கு தலைலை தாங்கிச் சென்று முன்னேறும் பகைவன் மீதும் தாண்டிக்குளம் மீதான ஊடுருவல் தாக்குதல், பெரியமடு மீதான ஊடுருவல் தாக்குதல் போன்றவற்றில் தனது பீரங்கி மூலம் நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தான் சிறிது காலம் சிங்களப் படைக்கு பெரும் சவாலவகக புளியங்குளத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமினுள் இருந்து 82 எம் எம் ரக மோட்டார் மூலம் முன்னேறும் பகைவனுக்குச் சவாலாக அமைந்தான்.60 எம் எம் , 81 எம் எம் 82 எம் எம் 120 எம் எம் போன்ற பீரங்கிகளை இயக்குவதிலும் வரைபடத்தைக் கையாளுவதிலும் சிறந்து விளங்கிய இவன் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவனானான்
சமர்க்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்ட இவன் தன் அரசியல் கற்கை நெறியினைத் தொடர்ந்தான் அக்கற்கை நெறியினைக்கற்கும் போராளிகளில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவன். அத்துடன் இவனது கல்லுரிகளில் நடைபெறும் கலைநிகழ்வுகள் அனைத்திலும் இவனது பிரசன்னம் இருக்கும் இவன் மேடையேறினால் மேடையே மலர்ந்து சிரிக்கும். தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்து சபையோரை வியக்க வைப்பான். மேலும் சிறந்தவொரு பேச்சாளனாகவும் விளங்கினான். எந்தவொரு விடயத்தையும் அனுகி ஆராய்ந்து சிறந்ததொரு பேச்சை முன்வைப்பான். அத்துடன் துப்பாக்கி மூலம் குறிபார்த்து சுடும் கலையிலும் இவன் வல்லவன்தான்.
இவன் ஆற்றல் ஆளுமை கண்ட பொறுப்பாளரால் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் ஆக நியமிக்கப்ட்டான். போராளிகளின் உணர்வலைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இவனுக்கு இருந்ததால் சிறந்த முறையில் தன் நிர்வாகத்தை நகர்;த்திச் சென்றான். அதன் மூலம் போராளிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றான்.
இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளை தலைவர் அவர்களின் சிந்தனையில் சிரு~;டிக்கப்பட்ட திட்டமொன்றிறிகாக தேர்வு செய்யப் பட்டான். அப்பணி மிகவும் கடினமானது. அபபணி தொலைது}ரத்தில் இவனுக்காக காத்திருந்தது. ஆதலால் தொலைது}ரம் செல்ல ஆயித்தமானான். செல்லுமுன் தலைவர் அவர்களைச் சந்தித்து அத்திட்டம் பற்றி அறிவினைப் பெற்று தன் பணிக்கு சென்றான். அங்கு தனது பணியை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி தலைவரின் பாராட்டைப் பெற்றான். இவ்வாறு தன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அன்புத் தலைவரின் அழைப்பை ஏற்று மீதினில் ஏறி வர ஆயத்தமானான்
அந்த வேளை அந்தக் கடற்கரையின் நீருக்குள் பாதம் பதித்து தனக்கெனக் காத்திருக்கும் விசைப் படகு நோக்கி நகர்கின்றான் நெரியன். அந்த விசைப் படகை அடைந்து அதற்குள் ஏறிக் கொள்கிறான். அதற்குள் ஏறிக் கொண்டவன் தன்; மனதுக்குள் பல கனவுகள் ஏற்றிக் கொண்டான். அன்புத் தலைவரின் தரிசனம் , அன்னை மண்ணின் தரிசனம் அன்புத் தோiர்களின் தரிசனம் அன்பு மக்களின் தரிசனம், என்று அவனின் எண்ண அலைகள்; ஆர்ப்பரிதது எழுந்து கொண்nருந்தவேளை விசைப்படகின் இயந்திரம் தன் இதயத்துடிப்பை இயக்கியது. பயணம் அலைகடலினு}டே நீண்டதொரு பயணம் ஆழ்கடலை இவனது படகு அண்மித்துக் கொண்டிருந்த வேளை கருமுகில் கூட்டங்கள் விண்மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் வான் தாய் தன் கண்ணீர்க் கடலின் கட்டுழடத்துவிட்டாள். இடிமின்னல் இடையிடையே தம் கண்களைத் திறந்து மூடின. கடல்த் தாயும் இயற்கையன்னையின் சிற்றத்தால் குழம்பிப் போனாள். அதனால் பேரலைகள் எழுந்தன. பயணம் தொடர்ந்தார்கள். யார் அறிவார்கள். அந்தக் கொடியோரின் குண்டுகள் இவர்களின் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றது என்று. கச்சதீவு கடல் மீது பேரினவாதப் பேய்களின் முன்று டோராக்கள் நேர் எதிரே தம் உயிர் பறிக்கும் கருவிகளின் குழாய்களை நீட்டி விட்டு இருந்தன. எதிர் பாராத பெரும் சமர் மூண்டது. பகைவனின் மூன்று படகுகளும் இவனது படகைச் சூழ்ந்து கொண்டன. இவகளிடம் ஆழ் ஆயுத பலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. எனினும் பிரபாகரனின் பிள்ளைகள் இவர்கள் இவர்களிடம் மனோபலம் மலையாக இருந்தது. அந்த வேளையில் எதிரியின் படகில் இருந்து பாய்ந்து வந்த குண்டொன்று இவன் மார்பைத் துளையிடுகின்றது. இவன் கடல் மீது தன் இதழ்களைப் பதிர்ந்து முத்தம் ஒன்றை அளித்துவிட்டு மாவீரர் என்ற மகுடம் தன்னை சூடிக் கொள்கிறான். இவனின் வித்துடலை கடலன்னை தன்னோடு அணைத்துக் கொள்கிறாள் இவன் கரம் சுமந்த துப்பாக்கி இளைய புலிவீரன் கரம்மீதிலிருந்து எதிரியின் திசை நோக்கி அனல் கக்குகிறது.. இவன் நினைவுகளைச் சுமந்து கரிகாலன் படை, பகைகுகையினுள்ளே பாய்கின்றது. தமிழீழம் என்ற பூவிங்கே மலரும் மட்டும் இப் பாய்ச்சல் ஓயாது.
நேரியன்..... இவன் உள்ளத்தில் உற்றேடுக்கும் நேர்மை இவன் பெயரினுள்ளும் பொதிந்து இருந்தது, தருணை இவள் கண்களில் குடி கொண்டிருந்தது. தெளிவான பார்வை ஆழமான கருத்துமிக்க வார்த்தைகள், கண்டோரை எளிதில் கவரும் இவன் இதழ் சிந்தும் காந்தப் புன்னகை, பணிவைத் தன்னில் சுமந்திருக்கும் அழகிய வதனம் பெருமையில்லாத உள்ளம். ஆணுக்கு ஏற்ற அளவான உயரம். உயரத்திற்கேற்ற ஆரோக்கியமான உடல்வாகு. இவை எல்லாம் இணைந்து இவனை அலங்கரித்தன.
1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாத நடுப்பகுதியில் தன்னை முழுமையாகக் கரிகாலன் சேனையில் இணைத்துக் கொணடான். தனது ஆரம்பப் பயிற்சியினை வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமான சரத்பாபு 7 இல் பெற்றுக் கொண்டான். பயிற்சி முகாமில் தனது உடல் வலு, உள வலு என்பவற்றைப் பெருக்கிக் கொண்டான். பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சமர் எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் கல்விக்கும் உண்டு என்ற தலைவரின் கணிப்புக்கு இணங்க அரசியல் கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டான்.
அரசியல் கற்கை நெறி ஆரம்பிக்கையில் தலைவரின் கருத்துரையை உன்னிப்பாக அவதானித்த இவன் அக்கற்கை நெறியின் அவசியத்தையுணர்ந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினான். கற்கை நெறி ஆரம்பிக்கும் அன்றுதான் இவன் முதல் முதல் தலைவர் அவர்களை நேரே தன் விழிகளால் சந்தித்துக் கொண்டான். ஈதலால் அந்த நாளை தன் வாழ்வுக் காலத்தில் என்றும் கரைந்து போகாத நினைவாக தன் நெஞ்சமதில் பதித்து வைத்தான்.
போரளிகளின் வாழ்வு என்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் போல, கல்வியறிவும், களப் பயிறிசியறிவும் மாறி மாறி ஊட்டப்பட்டது. இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு கரைந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் பேய்கள் 'முன்னேறிப் பாய்தல்" என்ற நடவடிக்கை மூலம் வலிகாமப் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்தது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் ஏதிலிகளாக்கப்ட்டு இவன் இருந்த முகாம் வீதியேங்கும் வீசியெறியப்பட்டார்கள். இதனை அவதானித்த இவன் மனம் குமுறியது. களம் செல்லத் துடித்தான். இந்த வேளையில் தலைவரின் திட்டத்திற்கமைய முன்னேறிய பகைவன் மீது பாய புலிகள் தயாராகினார்கள். இவனும் அணியோன்றில் இணைக்கப்ட்டான். எனினும் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை எதிர்பார்த்ததை விட இலகுவில் வெற்றி கொள்ளப்ட்டதால் அவனது அணி சண்டைக்கு செல்லவில்லை.
இவ்வாறு இவனது கள வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த போது 60 எம்.எம் மோட்டார் பயிற்சி பெறுவதற்காக அனுப்பட்பட்டான். இவன் எதையும் கற்றுக் கொள்வதில் கற்ப10ரம் என்பதால் குறுகியகால பயிற்சியுடன் மோட்டாரை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவனாக வெளியேறினான். வெளியேறிய இவன் தனது மோட்டாருடன் முதலாவது களத்தில் எதிரியைச் சந்திக்கிறான். அந்தக் களம் திருவடி நிலைப் பக்கமாக இருந்து முன்னேறிய எதிரி மீதான தாக்குதல். அத்தான்குதலின் போது இவனது வோக்கி டோக்கி செயலிழந்து விட்டது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எறிகணை ஏவ வேண்டும். உடனே தனது அறிவு அனுபவத்தைப் பயன்படுத்தி டாங்கியில் சத்தம் வரும் நிலை நோக்கி மோட்டரை ஏவினான். ஏவிய எறிகணைகள் எதிரியின் டாங்கி மீதும் அதனைச் சூழ உள்ள பிரதேசத்துள் மீதும் வீழ்ந்து வெடித்தன. இக்களத்தில் இவனது மோட்டாரை இயக்கும் ஆற்றல் வெளிப்பட்டது.
மறுநாள் இவன் சூரியகதிர் இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள களம் விரைந்தான்;. அங்கு முன்னேறிய பகைவன் மீது நேர்த்தியான சூடுகளை வழங்கி எதிரியின் பக்கம் பலத்த இழப்பு ஏற்பட வழிவகுத்தான். 'சூரியக் கதிர்" இராணுவ நடவடிக்கை கோப்பாய் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்த போது இவன் அக்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டான். அங்கு தனது கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் ப10தம் ஆனையிறவில் இருந்து கிளிநோச்சி நோக்கி தனது ஆக்கிரமிப்பு கரத்தை நீட்டின. சத்ஜெய 1. 2 என ஆக்கிரமிப்பு முயற்சிகள் தோல்வியைத் தழுவ சத்ஜெய 3 எனத் தொடர்ந்தது. சத்ஜெய 3 இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள இவன் 120 எம். எம் மோட்டார் அணியில் ஒருவனாக நின்று செயற்பட்டான். பின்பு ஆனையிறவு பரந்தன் மீதான ஊடுருவல் தாக்குதலின் போது 1200 எம்.எம் மோடார் ஒன்றுக்கு தலைமை தாங்கி சென்று நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணிகளுக்கு பலம் சேர்த்தான்.
மே 13.. 2997 இல் மிகப்பெரும் பகைவெள்ளம் தாண்டிக்குளம் ஊடாகவும், நெடுங்கேணியுடாகவும் நகர்ந்தது. இதனை எதிர்கொள்;ள இவன் 120 எம் எம் பீரங்கியோன்றுக்கு தலைலை தாங்கிச் சென்று முன்னேறும் பகைவன் மீதும் தாண்டிக்குளம் மீதான ஊடுருவல் தாக்குதல், பெரியமடு மீதான ஊடுருவல் தாக்குதல் போன்றவற்றில் தனது பீரங்கி மூலம் நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தான் சிறிது காலம் சிங்களப் படைக்கு பெரும் சவாலவகக புளியங்குளத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமினுள் இருந்து 82 எம் எம் ரக மோட்டார் மூலம் முன்னேறும் பகைவனுக்குச் சவாலாக அமைந்தான்.60 எம் எம் , 81 எம் எம் 82 எம் எம் 120 எம் எம் போன்ற பீரங்கிகளை இயக்குவதிலும் வரைபடத்தைக் கையாளுவதிலும் சிறந்து விளங்கிய இவன் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவனானான்
சமர்க்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்ட இவன் தன் அரசியல் கற்கை நெறியினைத் தொடர்ந்தான் அக்கற்கை நெறியினைக்கற்கும் போராளிகளில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவன். அத்துடன் இவனது கல்லுரிகளில் நடைபெறும் கலைநிகழ்வுகள் அனைத்திலும் இவனது பிரசன்னம் இருக்கும் இவன் மேடையேறினால் மேடையே மலர்ந்து சிரிக்கும். தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்து சபையோரை வியக்க வைப்பான். மேலும் சிறந்தவொரு பேச்சாளனாகவும் விளங்கினான். எந்தவொரு விடயத்தையும் அனுகி ஆராய்ந்து சிறந்ததொரு பேச்சை முன்வைப்பான். அத்துடன் துப்பாக்கி மூலம் குறிபார்த்து சுடும் கலையிலும் இவன் வல்லவன்தான்.
இவன் ஆற்றல் ஆளுமை கண்ட பொறுப்பாளரால் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் ஆக நியமிக்கப்ட்டான். போராளிகளின் உணர்வலைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இவனுக்கு இருந்ததால் சிறந்த முறையில் தன் நிர்வாகத்தை நகர்;த்திச் சென்றான். அதன் மூலம் போராளிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றான்.
இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளை தலைவர் அவர்களின் சிந்தனையில் சிரு~;டிக்கப்பட்ட திட்டமொன்றிறிகாக தேர்வு செய்யப் பட்டான். அப்பணி மிகவும் கடினமானது. அபபணி தொலைது}ரத்தில் இவனுக்காக காத்திருந்தது. ஆதலால் தொலைது}ரம் செல்ல ஆயித்தமானான். செல்லுமுன் தலைவர் அவர்களைச் சந்தித்து அத்திட்டம் பற்றி அறிவினைப் பெற்று தன் பணிக்கு சென்றான். அங்கு தனது பணியை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி தலைவரின் பாராட்டைப் பெற்றான். இவ்வாறு தன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அன்புத் தலைவரின் அழைப்பை ஏற்று மீதினில் ஏறி வர ஆயத்தமானான்
அந்த வேளை அந்தக் கடற்கரையின் நீருக்குள் பாதம் பதித்து தனக்கெனக் காத்திருக்கும் விசைப் படகு நோக்கி நகர்கின்றான் நெரியன். அந்த விசைப் படகை அடைந்து அதற்குள் ஏறிக் கொள்கிறான். அதற்குள் ஏறிக் கொண்டவன் தன்; மனதுக்குள் பல கனவுகள் ஏற்றிக் கொண்டான். அன்புத் தலைவரின் தரிசனம் , அன்னை மண்ணின் தரிசனம் அன்புத் தோiர்களின் தரிசனம் அன்பு மக்களின் தரிசனம், என்று அவனின் எண்ண அலைகள்; ஆர்ப்பரிதது எழுந்து கொண்nருந்தவேளை விசைப்படகின் இயந்திரம் தன் இதயத்துடிப்பை இயக்கியது. பயணம் அலைகடலினு}டே நீண்டதொரு பயணம் ஆழ்கடலை இவனது படகு அண்மித்துக் கொண்டிருந்த வேளை கருமுகில் கூட்டங்கள் விண்மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் வான் தாய் தன் கண்ணீர்க் கடலின் கட்டுழடத்துவிட்டாள். இடிமின்னல் இடையிடையே தம் கண்களைத் திறந்து மூடின. கடல்த் தாயும் இயற்கையன்னையின் சிற்றத்தால் குழம்பிப் போனாள். அதனால் பேரலைகள் எழுந்தன. பயணம் தொடர்ந்தார்கள். யார் அறிவார்கள். அந்தக் கொடியோரின் குண்டுகள் இவர்களின் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றது என்று. கச்சதீவு கடல் மீது பேரினவாதப் பேய்களின் முன்று டோராக்கள் நேர் எதிரே தம் உயிர் பறிக்கும் கருவிகளின் குழாய்களை நீட்டி விட்டு இருந்தன. எதிர் பாராத பெரும் சமர் மூண்டது. பகைவனின் மூன்று படகுகளும் இவனது படகைச் சூழ்ந்து கொண்டன. இவகளிடம் ஆழ் ஆயுத பலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. எனினும் பிரபாகரனின் பிள்ளைகள் இவர்கள் இவர்களிடம் மனோபலம் மலையாக இருந்தது. அந்த வேளையில் எதிரியின் படகில் இருந்து பாய்ந்து வந்த குண்டொன்று இவன் மார்பைத் துளையிடுகின்றது. இவன் கடல் மீது தன் இதழ்களைப் பதிர்ந்து முத்தம் ஒன்றை அளித்துவிட்டு மாவீரர் என்ற மகுடம் தன்னை சூடிக் கொள்கிறான். இவனின் வித்துடலை கடலன்னை தன்னோடு அணைத்துக் கொள்கிறாள் இவன் கரம் சுமந்த துப்பாக்கி இளைய புலிவீரன் கரம்மீதிலிருந்து எதிரியின் திசை நோக்கி அனல் கக்குகிறது.. இவன் நினைவுகளைச் சுமந்து கரிகாலன் படை, பகைகுகையினுள்ளே பாய்கின்றது. தமிழீழம் என்ற பூவிங்கே மலரும் மட்டும் இப் பாய்ச்சல் ஓயாது.
Tuesday, September 09, 2003
Monday, September 08, 2003
லெப்.கேணல் ராதா
கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ்
வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20-05-1987
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு விதமான பார்வையைக் கொடுக்கவில்லை.
சாந்தமும் வசீகரமும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் நிர்வாக ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.
யாழ் இந்துக்கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் அதிபரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.
கல்வி, விளையாட்டு, நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக்கொண்டு கொழும்பில் வங்கியொன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.
அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வித்தியாசமான வீரனை, நடமாடும் பல்கலைக்கழகத்தினை இனங் கண்டுகொண்ட தேசியத்;தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?
பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஒருவனை அங்கே காணமுடிந்தது.
"Scout Attention" என்ற அதிகார அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான இராணுவ நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, அசுர வேகம் அதுதான் ராதா.
ராதா அசைக்கமுடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே னுரஅடி ரவன்ஸ் எனப்படும் போலிக்குண்டுகளைப் பாவித்து போர்க்கள நிலைமையைப் போன்ற பிரமையை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பாவிக்க விரும்பவில்லை, நிஜமான குண்டுகளை பாவிக்கப்போவதாக ராதா தலைவரிடம் அனுமதி வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு அனுமதி கொடுத்தார்.
"Down Position" இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். நிஜமான குண்டுகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றனர். அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பாலான அடிப்பாகங்களைக் கொண்ட சப்பாத்துக்களை கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த 'அத்காரி ராதாவைக்" காணவில்லை. ஒரு நல்ல நண்பனை, தோழனை அங்கே காணமுடிந்தது. என்ன I say கஸ்டமா இருக்கா, துன்பந்தான். இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.
பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப்பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடலை மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வித்தியாசமானவர்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மேசையில் புத்தகங்களும் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.
அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் வாக்கிடோக்கியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "னுழறn Pழளவைழைn" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம்; அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அது வரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய பட்டாளம் ஒன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து பறந்து சென்றது.
தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் Command கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்"என்று ராதா கூறி முடித்தார்.
ராதாவைத் தொடர்ந்த பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்றைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் யுடநசவ வந்தால் எப்படி positionP எடுக்கிறது ஒன்று . order வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நிண்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார்.
இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற விசேட கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.
விக்டர் இறந்த பின் மன்னார்ப் பிரதேசத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவலோ" கவச வாகனத்தைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.
கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ் பிராந்தியத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி இராணுவமுகாம், மயிலியதனை இராணுவமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ இராணுவமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ ளுயல எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வாசகம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது பசிய நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.
வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20-05-1987
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு விதமான பார்வையைக் கொடுக்கவில்லை.
சாந்தமும் வசீகரமும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் நிர்வாக ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.
யாழ் இந்துக்கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் அதிபரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.
கல்வி, விளையாட்டு, நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக்கொண்டு கொழும்பில் வங்கியொன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.
அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வித்தியாசமான வீரனை, நடமாடும் பல்கலைக்கழகத்தினை இனங் கண்டுகொண்ட தேசியத்;தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?
பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஒருவனை அங்கே காணமுடிந்தது.
"Scout Attention" என்ற அதிகார அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான இராணுவ நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, அசுர வேகம் அதுதான் ராதா.
ராதா அசைக்கமுடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே னுரஅடி ரவன்ஸ் எனப்படும் போலிக்குண்டுகளைப் பாவித்து போர்க்கள நிலைமையைப் போன்ற பிரமையை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பாவிக்க விரும்பவில்லை, நிஜமான குண்டுகளை பாவிக்கப்போவதாக ராதா தலைவரிடம் அனுமதி வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு அனுமதி கொடுத்தார்.
"Down Position" இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். நிஜமான குண்டுகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றனர். அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பாலான அடிப்பாகங்களைக் கொண்ட சப்பாத்துக்களை கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த 'அத்காரி ராதாவைக்" காணவில்லை. ஒரு நல்ல நண்பனை, தோழனை அங்கே காணமுடிந்தது. என்ன I say கஸ்டமா இருக்கா, துன்பந்தான். இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.
பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப்பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடலை மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வித்தியாசமானவர்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மேசையில் புத்தகங்களும் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.
அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் வாக்கிடோக்கியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "னுழறn Pழளவைழைn" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம்; அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அது வரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய பட்டாளம் ஒன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து பறந்து சென்றது.
தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் Command கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்"என்று ராதா கூறி முடித்தார்.
ராதாவைத் தொடர்ந்த பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்றைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் யுடநசவ வந்தால் எப்படி positionP எடுக்கிறது ஒன்று . order வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நிண்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார்.
இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற விசேட கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.
விக்டர் இறந்த பின் மன்னார்ப் பிரதேசத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவலோ" கவச வாகனத்தைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.
கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ் பிராந்தியத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி இராணுவமுகாம், மயிலியதனை இராணுவமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ இராணுவமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ ளுயல எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வாசகம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது பசிய நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.
லெப் கேணல் ரவி
குமாரவேல் இரவீந்திரகுமார் - வன்னிமாவட்டம்
வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சு10றையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.
அமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த இராணுவத்தின் ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.
மீளவும் 1990ன் நடுப்பகுதியில் இரண்டாம் கட்டம் மாங்குளம் தளங்களைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 இராணுவ நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர்நிலங்களிலும் நின்று முதன்மையாகச் சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மனஉறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து ரவியவர்கள் களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் ச10டுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.
1993ல் ஒப்பறேசன் யாழ் தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாக க் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.
பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசவாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.
எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.
மூலம் - எரிமலை
வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சு10றையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.
அமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த இராணுவத்தின் ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.
மீளவும் 1990ன் நடுப்பகுதியில் இரண்டாம் கட்டம் மாங்குளம் தளங்களைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 இராணுவ நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர்நிலங்களிலும் நின்று முதன்மையாகச் சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மனஉறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து ரவியவர்கள் களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் ச10டுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.
1993ல் ஒப்பறேசன் யாழ் தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாக க் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.
பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசவாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.
எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.
மூலம் - எரிமலை
Subscribe to:
Posts (Atom)